top of page

இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்!

Custom alt text

லண்டன்: சமூக ஊடக வீடியோவை படம்பிடிக்கும் போது ஓடும் காரில் சீட்பெல்ட் அணியாமல் இருந்ததற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) அபராதம் விதித்துள்ளது இங்கிலாந்து காவல்துறை. சுனக்கின் பெயர் குறிப்பிடாமல்,  “லங்காஷயரில் ஓடும் காரில் பயணி ஒருவர் சீட் பெல்ட் அணியத் தவறியதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை, ஜன. 20) லண்டனைச் சேர்ந்த 42 வயது நபருக்கு அபராதம் விதித்துள்ளோம் ” என்று லங்காஷயர் காவல்துறை ட்வீட் செய்தது. 

இந்த அறிவிப்புக்குப் பிறகு, சுனக்கின் அலுவலகம், “பிரதமர் இது தவறு என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரியுள்ளார். அவர் நிச்சயமாக நிர்ணயிக்கப்பட்ட தண்டனைக்கு இணங்குவார்”, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இருக்கும்போது சுனக், அபராத அறிவிப்பைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும். 

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page